Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, May 21, 2010

செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா? கருணாநிதியின் விளம்பரத்திற்கா?

தமிழ்நாட்டில் தமிழிலேயே படிக்காமல் மழலை முதல் உயர்கலவி வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், தமிழே தெரியாமல் அண்டை மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலம் மொழி வழிகளிலேயே படிக்கிற வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது ஆனால், மருத்துவ படிப்பு மற்றும் உயர் கல்விகளே தமிழிலில் படிக்க வழியில்லை.






தமிழகத்தின் உயர் வழக்கு மன்றத்திற்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம், என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் இன்னும் மாற்றவில்லை அதிலும் தமிழில் பேச தர்க்கமிட முடியாது.



தமிழக அரசு அலுவலகங்களில் கூட தமிழில் ஆட்சி நடைமுறைகள் முழுமையாக இல்லை. தமிழகத்தில் இருக்கிற இந்திய அரசு அலுவலகங்களில் தமிழகமே நுழைய முடியாது.



வங்கிகளில் தமிழ் இல்லை, வழிபாட்டில் தமிழ் இல்லை இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவர வேண்டுமான முயற்சி திராவிட கட்சிகளிடம் இல்லை. முத்தமிழ் அறிஞர், ஐந்தமிழ் அறிஞர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கருணாநிதிக்கு தமிழனைத் தமிழில் படிக்க வைக்க முடியவில்லை.



தில்லியில், மும்பையில் ஓடும் வண்டிகளில் இந்தியில் எண்கள் உள்ளன. கருநாடகத்தில் கன்னடத்தில் எண்கள், குஜராத்தில் குஜராத்திதியில் எண்கள், வங்காளத்தில் வங்காள மொழியில் எண்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தமிழில் எண்கள் எழுதினால் விதி மீறல் என்று சிறைப்படுத்துகிறது தமிழக அரசு.



தமிழினத் தலைவர் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்தும் தமிழை கல்வி மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ நடைமுறைப்படுத்த இயலவில்லை என்றால் அவர் எதை நோக்கி மாநாடு அறிவிக்கிறார்.



செம்மொழி என்று இந்திய அரசு தமிழை ஏற்றிருப்பது சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கூட அல்ல.



ஆண்டுதோறும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி உருவாய் ஒதுக்குகிற இந்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு ஒரு கோடி மட்டும் ஒதுக்குகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்தால் தமிழ் எந்த அளவு இழிவுக்குள்ளாக்கப்படுகிறது என்பது தெரியும்.



தமிழக மக்களின் வாயை அடைப்பதற்கு தமிழைச் செம்மொழி என்கிற அறிவிப்பை ஒப்புக்கு இந்திய அரசு செய்திருக்கிறது என்றால், அதற்கு விழாச் சிறப்பு மாநாடு நடத்தி பெருமைப்பட்டுக் கொள்வது தமிழர்களின் காதுகளில் பூச்சுற்றவே அல்லாமல் வேறொன்றும் இல்லை.



மொத்தத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஏதும் செய்ய இயலாத கலைஞர் கருணாநிதி, தமிழுக்குச் செய்ததாய் விளம்பரம் தேடிக் கொள்வதற்குத்தான் இந்த மாநாடு.



இப்படி விளம்பரம் தேடத் தான் இந்த மாநாடு பயன்படும் என அறிந்தே உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினர் 9 ஆம் உலகத் தமிழ் மாநாட்டினை இப்போது நடத்த இசைவு தரவில்லை.



அந்த தோல்வியை மறைப்பதற்காக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் புதிதாக ஒரு தலைப்பை உருவாக்கிப் புது வேடம் கட்டித் தன் காட்சித் திரையை இறக்குகிறார் கருணாநிதி.



ஆக, தமிழ் வளர்ச்சிக்குரிய மாநாடு இது இல்லை என்பதும் கலைஞர் கருணாநிதி தம் விளம்பரத்திற்கு நடத்திக் கொள்ளும் மாநாடு என்பதும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.

Friday, April 16, 2010

தமிழக அரசியல் கட்சிகள்:

தமிழக அரசியல் கட்சிகள்:




தி.மு.க :

தலைவர் : இப்போது திரு.கருணாநிதி, அடுத்து யாரோ? (போட்டி)
 
 
 
பலவீனம்:


நாட்டுக்காக கட்சி அல்ல, தன் குடும்பத்திற்காக கட்சி!

நாட்டை குடும்பத்திற்கு கொடுத்து விட்டு, தன் வீட்டை நாட்டுக்கு கொடுத்தவர்.

"தமிழ் இனத் தலைவர்" என கூறிக் கொண்டு, சோனியாவின் பேச்சைக் கேட்டு ஈழத்தமிழர்க்கு துரோகம் செய்தவர் (பதவிக்காக).
இப்போது பணத்தால் மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைத்து சந்தோஷத்தில் இருப்பவர். (மக்கள் திருந்துவார்களா?)மின்சார வெட்டால் மக்கள் படும் அவதி.

பலம்:அரசு ஊழியர்கள்,ஒரு ரூபாய்ககு அரிசி,அவசர உதவி 108, காப்பீட்டுத்திட்டம்.,ஏழை திருமண உதவி.

காங்கிரஸ் :

பலவீனம் : எத்தனை கோஷ்டி என்று யாருக்கும் தெரியாது...!
தமிழரின் தோளில் (தமிழக அரசியல் கட்சி)ஏறிக்கொண்டு அரசியல் செய்வர்,ஆனால் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்வர்.
இத்தாலியப் பெண்ணை "அன்னை" என்று கூறுகின்றனர் (திரு.கருணாநிதிக்கும் அவர் "அன்னை") "அன்னை" என்ற சொல்லுக்கு வந்த அவமானம்!

பலம் : தேசியக் கட்சி, அன்றைய காலத்தில் உள்ள சுகந்திர போராட்டத் தியாகிகள் மற்றும் காமராஜரின் உண்மை தொண்டர்கள்.

அ.தி.மு.க

பலவீனம்: சகோதரிப் பாசம்,கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு,சகோதரியின் அறிவுரைப்படி அரசியல் பண்ணுதல்,ஆணவம்,அறிவுரை கூற ஆள் இல்லை,கேட்கவும் மதி இல்லை. பிறரை மதியாமை.

பலம் : எம்ஜியார், இரட்டை இலை சின்னம் மற்றும் எம்ஜியாரின் உண்மையான தொண்டர்கள்!!!

பா.ம.க.

பலவீனம்:: சந்தர்ப்பாவாத அரசியல் (சில சமயம் "அந்த அம்மையார்" என்பார், சில சமயம் "சகோதரி" என்பார்) சாகும் முன் எப்படியாவது முதல் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை. சாதியை வைத்து அரசியல் நடத்துதல். பழைய தொழில் மரம் வெட்டுதல் (போராட்டம் என்ற பெயரில்)

பலம் : சாதி வெறிப்பிடித்த சில மக்கள்.

கம்யூனிஸ்ட் :

பலவீனம்: இப்போது அவர்கள் தங்கள் கொள்கையை மறந்து அரசியல் பண்ணுதல். முன்பு போல் மக்களுக்காக போராட்டம் நடத்தாமல், சுயநலத்துக்காக போராட்டம் நடத்துதல்

பலம் : இப்போது சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை.

ம.தி.மு.க

பலவீனம் : தன்மானம்,கொள்கை இரண்டையும் விட்டுவிட்டு அரசியல் பண்ணுதல். கட்சி தலைவரை காணவில்லை. பாவம் தொண்டர்கள்

பலம் : அப்படினா என்ன?

தே.மு.தி.க

பலவீனம்: சினிமாத்தனமான பேச்சு,தன் உறவினருக்கு மூக்கிய கட்சிப்பதவியை கொடுப்பது.

பலம்: தன் ரசிகர்கள்,யாருக்கும் ஓட்டு போட பிடிக்காமல், இவருக்கு ஓட்டு போடும் மக்கள்,கட்சி நிர்வாகிகளில் பலர் பணம் படைத்தவர்கள்.

இன்னும் பல கட்சிகள் இருக்கின்றன.... அதைப்பற்றி எழுத ஒன்றும் இல்லை.

தமிழக மக்களே சிந்திப்பீர்.....

மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் பொதுவானவைகள்.

பின் குறிப்பு: கட்சி அனுதாபிகள் யாரும் கோபம் கொள்ள வேண்டாம், குறிப்பாக கம்யூனிஸ்ட் தோழர்கள்!!