தமிழ் செம்மொழி மாநாடு தேவையா?
இப்போது கோவையில் நடைபெறும் தமிழ்செம்மொழி மாநாடு இப்போது நம் நாட்டுக்கு தேவையா, என்று சற்று சிந்தித்து பார்த்தால் அது இப்போது தேவை இல்லை என்று தான் தோன்றும். அது தான் உண்மை. இந்த மாநாட்டால் யாருக்கு லாபம்? என்னை பொருத்தவரை இந்த மாநாடு தி.மு.க ம்ற்றும் அதன் கூட்டனிக்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து,எதிர் வரும் தேர்தலை மனதில் வைத்து அவர்களுடைய விளம்பரத்திற்காக நடத்தும் மாநாடு தான் , மற்றப்படி இந்த மாநாட்டால் யாருக்கு என்ன பயன்? தமிழ் நாட்டு மக்களுக்கா? அல்லது நம் தமிழ் மொழிக்கா? அல்லது பிற நாட்டில் வாழும் நம் மக்களுக்கா,(குறிப்பாக இலைங்கையில் வாழும் நம் தமிழ் மக்களுக்கா? சற்று சிந்தித்து பார்த்தால் நம் அனைவருக்கும் நன்கு புரியும். இந்த மாநாட்டுற்கு ஆகும் செலவு ரூபாய் 400 கோடி!!!! இது யார் பணம்? எல்லாம் நம் மக்கள் வரி பணம்!!! இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தேர்தல் வரும் போது தமிழராக இருந்து பதில் கொடுங்கள்..... முடிந்தால்!!