Thursday, February 11, 2010

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.

1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.

துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்


மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................

400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்......


ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?

“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....

அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?

நல்ல நியாம்டா சாமி.............

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......

ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....


''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...

யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''


ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................


மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்.....................


1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...

பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?

சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?

இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?

இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!

எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........

அட நாய்களே.....

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை

மனிதனாக இருந்தால் போதும்.....

Tuesday, February 9, 2010

முதல்வர் கருணாநிதிக்கு கடந்த பிப். 6 ல் தமிழ் திரையுலகின் சார்பில் __(?) வது பாராட்டு விழா.

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விழா. இந்நிகழ்ச்சியின் மூலம் கலைஞர் டிவி -ன் TRB ரேட்டிங்கை உயர்த்திக் கொள்ளலாம் என்ற மகிழ்ச்சி சிலருக்கு. முதல்வர் கருணாநிதிக்கு மேலும் ஒரு பாராட்டு விழா.முதல்வர் கருணாநிதிக்கு கடந்த பிப். 6 ல் தமிழ் திரையுலகின் சார்பில் __(?) வது பாராட்டு விழா. எதற்காக இந்த பாராட்டு விழா, பையனூரில் 90 ஏக்கர் அரசு நிலத்தை திரையுலகிற்கு இலவசமாக வழங்கியதற்காகவாம். சரி விஷயத்திற்கு வருவோம், இந்த பாராட்டு விழாவிற்கான கலைநிகழ்ச்சி ஒத்திகைகளுக்காக கடந்த 1 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் இரத்துசெய்யப்பட்டன. இதன் மூலம் சில குத்தாட்ட நடிகைகள் நடனப்பயிற்சி மேற்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான சினிமா சார்ந்த தொழிலார்கள் வேலையின்றி நிற்கின்றனர். அவர்கள் என்ன கோடிகணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டார்களா? அல்லது உலகநாயகர்களா? .. சாதரணமான தங்களின் தினசரி வருமானத்தை நம்பி பிழைக்கும் அடிமட்ட கூலி தொழிலாளர்கள் தானே.இவர்கள் வேலை இழப்பதைப் பற்றி கவலை இல்லாமல் அந்த 86 வயது மூத்த தமிழனுக்கு இப் பாராட்டு விழா அவசியம்தானா?. இந்த பாவச்செயலை தமிழினத்தலைவன் என்று தன்னைதானே ஆட்கள் வைத்து அழைத்து பெருமைபட்டுகொள்ளும் அந்த முதிர் வயது கலையுலக காவலாளி எண்ணிப் பார்த்தாரா?!!. மனசாட்சியுள்ள எந்த மனிதனாவது மற்றவர்களின் பிழைப்பைக் கெடுத்து தான் பாராட்டபடுவதை எண்ணி பெருமைப்படுவரா?. தனக்கு பிச்சைபோடும் சாதாரண மனிதர்கள் கூட நன்றாய் பிழைக்கவேண்டும் என்று என்னும் பிச்சைக்காரன் போல் கூட இல்லாமல் பலகோடி மக்கள் பிச்சையாய் போட்ட முதல்வர் எனும் பதவியில் அமர்ந்து கொண்டு அம்மக்களுள் மக்களான சினிமாத் தொழிலாளர்களின் வேலையைக் கெடுத்து வயிற்றில் அடிக்கும் இத்தகைய இழிவான செயல் எதற்காக?சரி, மற்ற ஒரு சில நடிகர்,நடிகைகளாவது இந்த குறிப்பிட்ட நாட்களில் பிறமொழிப்படங்களில் நடிக்கச் செல்லலாம் என்றால், அதற்கு குறுக்கீடாக ஒரு தடை. இந்த விழாவில் ஆடாத மற்றும் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகளுக்கு இனிமேல் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடையாம்? இதைப் பற்றி நடிகர் அஜித்குமார் விழா மேடையிலேயே வெளிப்படையாக தாங்கள் மிரட்டப்படுவதாக குமுறினார், அதற்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்றுகைதட்டினார். நீங்கள் இவ்வளவு கேவலமானவர்களா? ஐயா, கருணாநிதி அவர்களே ! காலம் கடந்து செல்லும், அப்பொழுது நீங்கள் இலவசமாக கொடுத்த அரசு நிலத்தில் எத்தனை அடிமட்ட சினிமா சார்ந்த கூலித் தொழிலாளர்கள் பயனடைகிறார்கள்!! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...."விதியே! விதியே! என் செய்ய நினைத்திட்டாய் என் தமிழ்ச்சாதியை??!!!"

Saturday, February 6, 2010

வேப்ப மரத்தில் பால்?

வேப்ப மரத்தில் பால்?
குறிப்பிட்ட இடைவெளிக்குப்பின் மக்கள் மத்தியில் மறந்தும் புத்திசாலித்தனம் அரும்பிவிடக்கூடாது என்ற முறையில் ஏதாவது ஒரு மூட நம்பிக்கை சமாச்சாரத்தைக் கிளப்பி விடுவார்கள்.
இப்பொழுது என்னவாம்! சோழிங்கநல்லூரில் வேப்பமரம் ஒன்றில் பால் வடிகிறதாம். வேப்ப மரத்தில் பால் வடியாமல், தேனா வடியும்?இது பகுத்தறிவாளர்களின் கேள்வி.
ஆனால், அங்கு என்ன பரபரப்பு தெரியுமா? இது தெய்வச் செயல்; இதில் தெய்வீகக் காரணம் இருக்கிறது; விளையாடாதீர்கள், விபரீதம் ஏற்படும் என்று சூட்டைக் கிளப்பிவிட்டார்கள்.
பிழைக்கத் தெரிந்த ஆசாமி ஒருவர் அம்மணமாக இருக்கும் வேப்பமரத்துக்கு மஞ்சள் பாவாடை ஒன்றைக் கட்டினார். அதோடு விட்டுவிட்டால் விறுவிறுப்பு இருக்காதே மரத்தின் அடியில் இரண்டு செங்கற்களை நட்டு வைத்தார் அது மட்டும் போதுமா? மக்கள் பக்தி மயக்கத்தில் வந்து விழவேண்டுமே! என்ன செய்தார்? செங்கல்லில் குங்குமத்தைத் தடவினார்.
ஆம், எதிர்பார்த்தபடி மூட மக்கள் குவிந்தார்கள்; நினைத்தது நடந்துவிட்டது. அடுத்த என்ன செய்யவேண்டும்? யோசித்தார் அந்த புத்திசாலி. ஒரு உண்டியலைக் கொண்டு வந்து வைத்தார். ஆம், இப்பொழுதுதான் தெய்வீகம், வழிபாடு, காணிக்கை என்பதான ஒரு சூழல். உண்டியல் நிரம்பி வழிந்தது. இப்பொழுதுதான் அந்த ஆசாமியின் உள்ளமும் நிரம்பி வழிந்தது.அத்தோடு அடங்கிவிட்டதா ஆசையின் அலை? ஒரு மாஸ்டர் திட்டம்; இந்த இடத்தில் கோயில் எழுப்பிடவேண்டும். அப்பொழுதுதானே பெருந்தொகை வசூல் வேட்டையில் இறங்க முடியும்?
ஆனால், அந்தப் பாமர மக்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது. அந்தப் பால் வடிவது இரண்டொரு நாளில் முடிந்த கதையாகிவிடும். தெய்வீகச் சக்தி என்றால், அதன் ஆட்ட பாட்டம் ஏன் இரண்டொரு நாளில் கடை கட்டவேண்டும்? பக்தி விஷயமாயிற்றே புத்தியைப் பயன்படுத்துவார்களா?
இதற்கு முன்புகூட இதுபோன்ற செய்திகள் வந்ததுண்டு. சென்னைத் தலைமைச் செயலகத்தின்முன் உள்ள ஒரு வேப்ப மரத்தில் இப்படித்தான் பால் வடிந்தது (1986 மார்ச்) சோழிங்கநல்லூரில் இப்பொழுது நடக்கும் இதே கூத்துதான் அப்பொழுதும்.சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவர இயல் பேராசிரியர் நாராயணசாமி அறிவியல் ரீதியாக இதன் குட்டை உடைத்துவிட்டார்.
வேப்ப மரத்தில் இப்படி பால் வடிவதற்கு எந்தவிதமான தெய்வீகக் காரணமும் அல்ல. இந்த மரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன. வேப்பமரப் பட்டையின் அடிப்பகுதியில் புளோயம் (Phloem) என்ற திசு இருக்கிறது. இந்தத் திசு வழியாக சர்க்கரையாக மாற்றப்பட்ட மாவுச் சத்து வரும்போது, அது பாலாக இனிக்கிறது. எல்லா வேப்ப மரத்திலும் இப்படி பால் வடிவதில்லை. இந்த மரத்தில் இந்தத் திசு பாதிக்கப்பட்ட காரணத்தால், இப்படிப் பாலாகக் கொட்டுகிறது. தேவையைவிட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும்போது பட்டையின் அடிப்பகுதியில் உள்ள திசு பாதிக்கப்பட்டு, அதன் வழியாகப் பாலாகக் கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது திசு அடைபட்டு, இனிப்புப் பால் வடிவதும் நின்று போகும்.
என்று விஞ்ஞான ரீதியாக விளக்கம் அளித்து 24 ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்குப் பிறகும் மூடக் குப்பையைக் கிளறுகிறார்கள்- மக்களின் பணத்தைச் சுரண்டுகிறார்களே - சிந்திக்க-வேண்டாமா? பழமொழி ஒன்று உண்டு; கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?
--------------------- மயிலாடன் அவர்கள் 5-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை