Monday, April 19, 2010

ஈழத்தமிழ் மக்களுடைய தலைவரின் தாயாருக்கு நேர்ந்த கொடுமை!!

ஈழத்தமிழ் மக்களுடைய தலைவரின் தாயாருக்கு நேர்ந்த கொடுமை!!


எண்பது வயதுடைய ஒரு மூதாட்டி தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மலேஷியாவில் இருந்து சிகிச்சைக்காக இந்தியா வருகிறார், அவரை இந்திய விமான நிலையத்திலேயே மறித்து உள்ளே விடாமல் மீண்டும் அவரை அதே விமானத்தில் அனுப்பிவைத்தனர் இந்திய அதிகாரிகள்.(மனிதாபிமானத்திலாவது அனுமதி கொடுத்து இருக்கலாமே? கல்நெஞ்சம்படைத்த சோனியா அரசு!!)

இதே போல் ஒரு மராட்டியருக்கோ,பஞ்சாப்பியருக்கோ அல்லது வேறு தமிழர் அல்லாத ஒருவருக்கு நடந்து இருக்காது, அப்படி நடந்து இருந்தால் என்னவாகி இருக்கும்?

இந்த கொடுமையை கண்டு தமிழகத்தில் ஆட்சி செய்யும் (தமிழ் இனத் தலைவர்??-புண்னாக்கு) முதல்வர் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்? "தமிழ்" என்ற மொழியை வைத்து அரசியல் செய்யும் மாமேதைகள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள்?


இந்த கொடுமை இனிமேல் நடக்காமல் இருக்க நம்மால் முடிந்தால் பிளாக் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கலாமே....!!

2 comments:

VijayaRaj J.P said...

ஒரே நாளில் 50ஆயிரம் பேரை கொல்ல
துணைபுரிந்த காட்டுமிராண்டிகளிடம்
வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?

அம்பிகா said...

\\VijayaRaj J.P said...
ஒரே நாளில் 50ஆயிரம் பேரை கொல்ல
துணைபுரிந்த காட்டுமிராண்டிகளிடம்
வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?\\

அதேதான்.