Friday, July 23, 2010

kavithaikaL...

நான் ரசித்த சில கவிதைகள்.....





வேர்கள்!!!

உறவுகளை அறிமுகப்படுத்தி,
உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,

என்னை நானாகவும்,
என்னை நீங்களாகவும்,

பார்க்கும் உங்களுக்காக மட்டும்
என்னையும் மாற்றிக்கொள்வேன்!!!




அம்மா

அவளை உதைத்த பொழுதில் கூட
செல்லமாய் என்னை
வருடின
அவள் விரல்கள்
வலியில் துடித்து கொண்டு கூறினாள்
என் செல்லமே
பயப்படாதே!
உனக்கு வலிக்காமல்
உன்னை பெற்றேடுப்பேன்..



நட்பு!!

அழுதவுடன் அரவணைக்கும்
அன்னையிடம் ஆரம்பிக்கும்
அந்த அழகிய நட்பு !!!

ஆள் கொஞ்சம் வளர்ந்திடவே
ஆடாத ஆட்டம் ஆட
ஆள்சேர்த்து ஆர்பரிக்கும்
ஆண்களின் நட்பு !!!

இவன் வீட்டு சாப்பாடு
இனம் விட்டு இடம் மாறி
இளம் சிட்டாய் இவ்வுலகையே
இரண்டக்கிடுமே இந்த நட்பு !!!

ஈயாய் ஒற்றிக்கொள்வோம்
ஈருயிராய் வாழ்ந்திடுவோம்
உள்ளதெல்லாம் செலவழிப்போம்
ஊரு ஊராய் சுற்றிடுவோம் !!!

எந்த ஜாதியும் அறியமாட்டோம்
ஏழை ஏக்கமமும் உணரமாட்டோம்
ஐந்து விரலாய் உதவிக்கொள்வோம்
ஒன்றாய் தட்டில் உணவு கொள்வோம் !!!

ஓரிடத்தில் இல்லா விட்டாலும்
ஓருயிராய் நினைவு கொள்வோம்
ஓளவை வயது வரை ஒற்றுமையாய்
உலகை அளப்போம் !!!!



அழகு

உன் அழகுகளை பற்றி
நீ உன் வீட்டு
உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...

உணர்ச்சி கவிஞன்...
என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
அதன் சுகமான இம்சைகளை...!!!



மௌனம்

பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்
அனால்,
மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் .!



வாழ்க்கைப் பயணம்...

நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை

இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை

என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........

கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை

தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......

எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......




பாசம்!!

பாசம் வைத்தவர்கள் எல்லாம்

தூர போகிறார்கள் என்னை பிரிந்து

இனி பாசம் வைப்பதில்லை

என்னருகில்,
ஒருவராவது...




குருதி ப‌டிம‌ங்க‌ள்

கைக‌ள் எங்கும் க‌றைக‌ள்
அது என்ன‌வென்று கூட‌ என்னால் யூகிக்க‌ முடிய‌வில்லை
என் சுவாச‌ ப‌குதி முழுவ‌தும் ப‌டிந்து ப‌டிந்து
ப‌டிம‌ங்க‌ள் ஆகி போன‌ குருதியோட்ட‌ம் !!
பூமிதாயின் குலுங்க‌லால் சிதில‌ம‌டைந்த‌
நாட்க‌ளில் குப்பைக‌ளை போல‌
வ‌ண்டிக‌ளில் ஏறிய‌ பிண‌க்குவிய‌ல்க‌ள்!!
அன்றோ க‌ட‌ல்தாயின் சீற்ற‌த்தால் சுழ‌ன்று வ‌ந்து
சுருட்டி கொண்டு போன‌ உயிர்க‌ள் எங்கோ?
இதுவெல்லாம் போதாதென்று இன‌ம்
ம‌த‌ம் மென‌ த‌லை பிய்த்து த‌சை பிரிக்கும் சில‌ர்!!
என்ன‌தான் ந‌ட‌க்கும் என‌ சில‌ர்!!
எதுவும் புரியாம‌ல் சில‌ர்!!
என்னை போன்ற‌ குருதி ப‌டிம‌ங்க‌ளிடையே சில‌ர்!!
ஈழ‌ த‌மிழ‌னாய்.........




ஊமைக் கொலைகள்...

பனித்துளி உறிஞ்சிடும்
சூரியன்...

மரம் வெட்டிடும்
கோடாரி...

பூமியை பிளந்திடும்
பூகம்பம்...

வானத்தை வடுப்படுத்தும்
மின்னல்...

பூ பறிததெறியும்
கரங்கள்...

நீரினை சிதறவிடாத
மேகங்கள்...

தழுவிச் சென்றிடாத
தென்றல்...

மௌனமாய் கண்ணீர்விடும்
மனங்கள்...

இவற்றில் நடப்பவையெல்லாம்
"ஊமைக் கொலைகளே..."


நன்றி!!!

4 comments:

VijayaRaj J.P said...

நல்ல கவிதைகள்...
பொருத்தமான படங்கள்.

அருமை பொன்ராஜ்.

அம்பிகா said...

கவிதைகளும் படங்களும் அருமை.
இரண்டு், மூன்று கவிதைகளாக
தனிதனி பதிவுகளாக தந்துருக்கலாமே.

Deepa said...

Sorry...somehow missed to publish your comment. Have done it now.

Good blog. Keep writing.

ponraj said...

அனைவருக்கும்
நன்றி நன்றி !!!